தமிழகத்தில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பிரபல புற்றுநோய் மருத்துவரான வி.சாந்தா கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், சுவாசக் கோளாறு, வாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகிவதாகக் கூறினார். "நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தில் 9ஆவது இடத்தில் இருந்த தமிழகம் இன்று முதலிடத்தை நோக்கிச் செல்கிறது. புகைபிடிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். "பள்ளி மாணவர்களிடம் நாம் புகையிலையின் தீங்குகளை உணர்த்த வேண்டும். இளைஞர்கள் அதிகளவு புகைக்கு அடிமையாவது கவலை அளிக்கிறது," என்றார் மருத்துவர் சாந்தா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!