பேருந்தில் 10 கிலோ தங்கம்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை சென்ற ஆம்னி பேருந்தை நாகூர் சோதனைச் சாவடியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பேருந்திலிருந்த ஒரு பையில் பத்து கிலோ தங்கம் இருந்தது. சுங்க இலாகா அதி காரிகள் தொடர்ந்து சோதனையிட் டதில் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தியது தொடர்பில் 2 பேரை விசாரணைக் காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தங்கம் கடத்தியது யார், எதற்காகக் கடத்தப்பட்டது, என்பது குறித்து காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!