இந்தியத் தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் மொகனியா செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த போலிசார் அவரைக் கைது செய்வதாகக் கூறி இழுத்துச் சென்றனர் (படம்). இதனால் டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவால் டெல்லியில் மோடி நெருக்கடி நிலையை அறிவித்திருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தண்ணீர்ப் பிரச்சினை பற்றி புகார் கொடுக்க குழுவாக வந்த பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. எம்எல்ஏ தினேஷின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கட்கிழமை வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள் ளது. டெல்லி நீர் வாரியத்தின் துணைத் தலைவரான திரு மொகனியா இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.