ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை: கருணாநிதி புகார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பில் திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார். சோதனை என்ற பெயரில் ஜெகத்ரட்சகனின் உடல்நிலை யைக் கருத்தில் கொள்ளாமல் அவரை வீட்டில் அடைத்து வைப் பது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக வருமான வரித் துறையினர் அவரை சிறைக்கைதி போல வீட்டில் அடைத்து வைத்துள் ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு வீட்டில் விசாரணை நடத்து வது தவறல்ல. ஆனால் 40 இடங்களில் சோதனை நடத்துவ தாகக் கூறி, ஜெகத்ரட்சகனை வீட்டில் அடைத்து வைப்பது சரியல்ல," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசி யல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சோதனை நடத்த தேவையான அளவு அதி காரிகளை அளிக்காமல், இரவு பகல் பாராமல் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனையிடுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரி வித்துள்ளளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!