மருத்துவக் கண்காணிப்பில் ஜெயலலிதா

அலுவலகப் பணிகளில் தீவிரம் காட்டும் ஜெயலலிதா சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல் லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச் சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது மருத்துவப் பரி சோதனையில் கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டதால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சலும் குறைந்தது. அவர் இயல்புநிலைக்குத் திரும்பி அரசுப் பணிகளை கவனித்து வருகிறார்.

வழக்கமான உணவுகளைச் சாப்பிடும் அவருக்கு ஒவ்வொரு வேளையும் போயஸ் தோட்டத்தில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வார்டில் உயர்மட்ட போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவருக்கு உதவியாக அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் மருத்துவ மனையிலேயே தங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் கேட் டறிந்து வருகின்றனர். நேற்றுடன் ஆறாவது நாளாக மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டாலும் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இதனால் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!