சிவகங்கை: பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துபோனதால் மனைவியைக் கொன்ற கணவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைதானார். சிவகங்கையைச் சேர்ந்த 68 வயதான பாலசுப்ரமணியத்தின் மனைவி விஜயா கடந்த 2013ல் கொல்லப்பட்டார். போலிசார் தீவிர விசாரணை நடத்தியும் கொலையாளி குறித்து துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கொலை நிகழ்ந்தபோது விஜயாவின் விரல் நகங்களில் சிக்கியிருந்த சில முடிகளை போலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை பாலசுப்ரமணியத்தின் நெஞ்சுப் பகுதியில் இருந்தவை எனத் தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதே இரவு வீடு திரும்பி, வேறொரு சாவியை வைத்து வீட்டுக் கதவைத் திறந்து, தூங்கிக் கொண்டி ருந்த விஜயாவின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அப்போது, விஜயா தன் நகத்தால் பாலசுப்ரமணியன் நெஞ்சில் கீறியபோது, சில முடிகள் நகத்தில் சிக்கிக்கொண்டன. இத னால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கணவர் சிக்கியுள்ளார்.
மனைவியைக் கொன்ற கணவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது
28 Sep 2016 09:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Sep 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!