நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம்

திருமலை: திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய அங்கமான கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் நெரி சலில் சிக்கி பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. வெள்ளிக் கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் பகுதிக்குச் செல்லும் முக்கிய பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். அன்று மாலையே ராம்பகிஜா விடுதி, வராகசாமி விடுதி, அன்னதானக் கூடம் ஆகியவை அடுத்துள்ள வழிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த பக்தர்கள் ஏராள மானோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மயங்கிய பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதேபோல், வடக்கு மேற்கு மாட வீதி சந்திப்பு, பெரிய ஜீயர் மடம், வாகன மண்டப பகுதி ஆகிய இடங்களில் காத் திருந்த பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் தடுமாறிய பக்தர்கள் மற்றவர்கள் உதவியுடன் வெளி யேறினர். அன்று இரவு வரை தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கிய சுமார் 50க்கும் அதிகமான பக்தர் களுக்கு அஸ்வின் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!