திருமலை: திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய அங்கமான கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் நெரி சலில் சிக்கி பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. வெள்ளிக் கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் பகுதிக்குச் செல்லும் முக்கிய பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். அன்று மாலையே ராம்பகிஜா விடுதி, வராகசாமி விடுதி, அன்னதானக் கூடம் ஆகியவை அடுத்துள்ள வழிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த பக்தர்கள் ஏராள மானோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மயங்கிய பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதேபோல், வடக்கு மேற்கு மாட வீதி சந்திப்பு, பெரிய ஜீயர் மடம், வாகன மண்டப பகுதி ஆகிய இடங்களில் காத் திருந்த பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் தடுமாறிய பக்தர்கள் மற்றவர்கள் உதவியுடன் வெளி யேறினர். அன்று இரவு வரை தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கிய சுமார் 50க்கும் அதிகமான பக்தர் களுக்கு அஸ்வின் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.