வாரணாசி நெரிசலில் பக்தர்கள் பலர் பலி

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று பாபா ஜெய் குருதேவ் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பக்தர்களில் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி 24 பேர் இறந்த தாகத் தெரிவிக்கப்பட்டது. ராஜ்காட் பாலத்தின் வழியாக பக்தர்கள் சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுடன் வாகனங்களும் செல்ல முயற்சி செய்ததால் கூட்டத்தில் நெரிசல் கடுமையானது. இதன் காரணமாக ஒருவரை யொருவர் தள்ளியபடி பக்தர்கள் முந்திச்செல்ல முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கூட்டம் அதிகரித்து மேலும் நெரிசல் ஏற்பட்டதால் பலர் கூட்டத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் 14 சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காய மடைந்த பக்தர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 3,000 பேர் பங்கேற்க வேண்டிய கூட்டத்துக்கு 7,000 பேருக்கு மேல் திரண்டதால் நெரி சல் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே முதல்வர் அகி லேஷ் யாதவ், நிவாரண உதவி களை உடனடியாக வழங்க அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலத்தைக் கடந்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டது. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!