தஞ்சாவூர்: தஞ்சை வல்லம் சோதனைச் சாவடியில் தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று பிற்பகல் மேற்கொண்ட அதிரடிச்சோதனையில் அந்த வழியாக வந்த ஒரு காரில் ரூ. 16 லட்சத்து 1,500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த கோவை சூலூரைச் சேர்ந்த முகமது சாகித்திடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
பிளைவுட் வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் பணத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.