பருவ மழை தொடங்கியது

சென்னை: தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழையை 3 மாதங்களுக்கு எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முழு அளவில் சம்பா சாகுபடி செய்ய முடியும் எனத் தமிழக விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், 'எல் நினோ' முடிவ தால் கடந்த ஆண்டைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இருக்காது என, பருவநிலை கணிப்பாளர் கள் கூறி உள்ளனர்.

மழை துவங்கியதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத் திற்கான நீர் திறப்பும் குறைக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்குப் பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரையும். வட கிழக்குப் பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் பெய்யும். தென் மேற்குப் பருவ மழை, வழக்கம் போல இந்த ஆண்டும், தமிழகத்தை ஏமாற்றிவிட்டது. அதனால், வடகிழக்குப் பருவ மழை துவங்கியதும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!