மதுரை: பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் மதுரையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.
இந்தச் சட்டம் தேவையா என ஊடகங்களிலும் பொது வெளியி லும் பல்வேறு விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் ஜமா அத் சார்பில் மதுரை ஓபுளா படித் துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். படம்: தகவல் ஊடகம்