பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவைப் பல ஊடகங்கள் சித்திரித்து வந்தாலும் பெண் பயணிகளுக்குச் சாதகமான சூழலை இந்தியா உருவாக்கியிருப்பதாக லண்டனில் அமைந்திருக்கும் அனைத்துலக பயணச் சந்தைக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள தனித் தன்மை வாய்ந்த வேலைவாய்ப்பு களை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அவ்வறிக்கையின்படி, பெண் கள் பெரும்பாலும் தனியாகப் பயணம் செய்யக்கூடிய இந்திய மாநிலங்களுள் தமிழகம் நான்காவது இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பெண்கள் அதிக அளவில் தனியாகப் பயணம் மேற்கொள் வதாக 'என்எஸ்எஸ்ஓ' எனப்படும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.