பெரம்பலூர்: ஏரி, குளங்களை மீட்கக் கோரி மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுததால் பெரம்பலூ ரில் பரபரப்பு நிலவியது. நன்னை கிராமத்தைச் சேர்ந்த 63 வய தான நல்லம்மாள் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வந்தார்.
அப்போது திடீரென ஆட்சியர் காலில் விழுந்த அவர், தன் கிராமத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 5 அரசு ஊழியர்கள் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் தெரிவித்து கதறி அழுதார். இதை யடுத்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.