இரு பேருந்துகள் மோதல்: ஐவர் பலி

விழுப்புரம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, கள்ளக்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டைகள் மீதேறி எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை மீட்டனர். எனினும் படுகாயமடைந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!