மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மையப்படுத்தி, சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் இவை. ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர வேண்டும் என சசிகலாவை கோரும் அதிமுகவினரின் வேண்டுகோள் அடங்கிய இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். தமிழகத்தின் சில ஊடகங்கள் சசிகலாவுக்கு எதிராக பல யூகச் செய்திகளை வெளியிட்டு வரும் வேளையில் அதிமுகவினரிடம் இருந்து சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வருவதை இதுபோன்ற சுவரொட்டிகள் காட்டுகின்றன. படம்: தமிழக ஊடகம்
சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்
9 Dec 2016 10:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!