சென்னை: தமிழக அரசியலை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு. இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்க நீதிபதிகள் 8 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டனர். சொத்துக்குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. பினாக்கி கோஸ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு விசாரித்து, நேற்று தீர்ப்பும் அளித்தது. அப்போது, ஊழல் என்ற அச்சுறுத்தல் சமுதாயத்தில் அதிக ரித்து வருவதாக நீதிபதி ராய் கவலை தெரிவித்தார். இந்தக் கவலையை தங்களுடைய தீர்ப்பின் மூலமாக வெளிப்படுத்தி இருப்ப தாகவும் அவர் கூறினார்.
தீர்ப்பு அளிக்கும் முன்னர் பேசிய நீதிபதி கோஸ், தீர்ப்பின் சுமையை நீதிபதிகள் இருவரும் எடுத்துக் கொண்டதாகவும் அதை அனைவரும் புரிந்துகொள்வர் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.