கோவை: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தைக் காட்டக் கூடாது என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதிற் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி வருவதாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார்.
"தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத் திற்கு மத்திய அரசே காரணம். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ ருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை.