இந்தியாவின் தென்மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள தாகவும் அதில் தமிழ்நாடுதான் ஆக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தியாவின் மத்திய நீர் ஆணையம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தென்மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் அளவு வெகுவாகக் குறைந்திருப்பதே இதற்குக் காரணம் என்று ஆணையம் கூறியது. அவற்றில் உள்ள தண்ணீர் அளவு வழக்கத்தைவிட 80 விழுக் காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.
காவிரி ஆற்றை அதிகம் நம்பியிருக்கும் நீர்த்தேக்கங்கள் 14 விழுக்காடு மட்டுமே நிரம்பி உள்ளன. இந்த நீர்த்தேக்கங்கள் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி களின் உயிர்நாடி. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் அளவு 65.43 விழுக்காடு குறைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.