புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஜனதா தள கட்சியின் நிதீஷ்குமார் ஆகி யோர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி யின் பாஜக கட்சியை வெற்றி பெறாமல் கவிழச் செய்ய உறுதிபூண்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டும் போதாது. நாடாளு மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமர வேண்டும் என்ற எண்ணத் துடன் 2019ஆம் ஆண்டு நடை பெற உள்ள நாடாளுமன்றத் தேர் தலுக்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வெற்றியைச் சுவைத்து விட்டோமே என்று ஓய்வாக இருந்துவிட மாட்டேன். உங்களை யும் ஓய்வில் இருக்க விடமாட் டேன்," எனப் பேசியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஜனதா தள கட்சியின் நிதீஷ்குமார் ஆகியோர் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் மோடியின் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றனர். படம்: ஊடகம்