தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கொல்லைப்புற வழி யாக தமிழகத்திற்குள் இந்தி மொழியைக் கொண்டு வர இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா அரசு துடிப்பதாக திமுக செயல் தலைவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்திக்கு மகுடம் சூட்டுவோம், தமிழை மட்டம் தட்டுவோம் என்ற போக்கில் மத்திய அரசு செயல் படுமேயானால் புதிய போராட்டக் களத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் எச்சரித்து இருக்கிறார். இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் முனை மழுங்காமல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இருக்கும் ஆங்கில எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின் றன. இந்தப் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
தமிழகத்தின் 75, 77 ஆகிய முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மைல்கற்களில் ஆங்கிலத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை அழித்துவிட்டு இந்தியில் எழுதும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது. காணொளிப்படம்