சகாயம்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான்

விருதுநகர்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். விருதுநகர் மகளிர் கல்லூரி ஒன்றில் நடந்த சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மாணவப் பருவம் மிகச்சிறந்த பருவம். இப்பருவத்தில் மாணவர் களுக் குத் தெளிவான இலக்கும் லட்சியமும் வேண்டும். இலக்கு உனக்காகவும் லட்சியம் சமூகத் திற் காகவும் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற எந்தச் சூழ் நிலையிலும் பின்வாங்காமல் செயல்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி னார். அதோடு, எந்தச் சூழ்நிலை யை யும் சமாளிக்கும் ஆற்றலை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வறுமையும் வெறுமை யும் உங்களை மாற்றக்கூடும். ஆனால், வெற்றிதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண் டும். ஆசிரியர்கள் மிகச்சரியான வழிகாட்டி. நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் பயப்படுகிறேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!