போர்க்கப்பலுக்கு வரவேற்பு

சென்னை: சென்னை துறை முகத்தை 'ஐஎன்எஸ் சென்னை' போர்க்கப்பல் வந்து சேர்ந்ததும் அங்கு கூடியிருந்த ஏராளமான மாணவர்கள் ஆரவாரத்துடன் வர வேற்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி மும்பையில் நடந்த விழாவில் 'ஐஎன்எஸ் சென்னை' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் போர்க் கப்பல் நேற்று சென்னைத் துறை முகம் வந்தடைந்தது.

அப்போது மாணவ, மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் போர்க்கப்பலை வர வேற்றனர். இந்த அதிநவீன 'ஐஎன்எஸ் சென்னை' போர்க்கப்பல் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. மொத்தம் 7,500 டன் எடை கொண்ட போர்க்கப்பலின் நீளம் 173 மீ. அகலம் 14.3 மீ. தரையிலிருந்து கரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக் கும் 'பிரமோஷ்' ஏவுகணை, வானத்தில் இலக்கைத் தாக்கி அழிக்கும் 'பராக்' ஏவுகணை ஆகியவை கப்பலில் வைக்கப் பட்டுள்ளன.

போர்க்கப்பலை இசைக் கருவிகளை வாசித்தும், கொடிகளை அசைத்தும் வரவேற்ற மாணவிகள். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!