சென்னை: தமிழக மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? என்று நடி கரும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான எஸ்வி சேகர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்து நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், "இந்திக்கு எதிரான போராட்டத்தை திமுக முன் எடுத்துள்ளது. ஆனால் நான் கேட்பதெல்லாம், தமிழகத்தைத் தவிர பிற தென்னிந்திய மாநி லங்களில் எல்லாம் இந்தி பேசு கிறார்கள், புழக்கத்தில் உள்ளது. "ஆனால் நாம் மட்டும் 4 தலை முறைகளாக அதை கற்காமல் இருக்கிறோம். மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது? அதுவும் ஒரு மொழி என்று நாம் ஏன் ஏற்க கூடாது?
"மேலும் இந்தி திணிப்பு மட்டுமல்ல விவசாய பிரச்சினை என எதை எடுத்தாலும் மோடியை திட்டுவதற்கு ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. மோடியே அடிப்படை யில் கடலை சாகுபடி செய்யும் விவசாயி என்பதை இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். "ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வந்து செவிமடுத்து குறைகளைக் கேட்டாரா? "பிரதமர் மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க இங்கு ஒரு கூட்டம் உள்ளது," என்று எஸ்வி சேகர் காட்டமாகப் பதிலளித்தார்.