மாட்டுத் தீவன வழக்கில் லாலுவுக்குக் கடிவாளம்

புதுடெல்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவன வழக்கை விசாரித்து ஒன்பது மாதங்களுக் குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. லாலு என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் மூன்று கட்சி கூட்டணியில் அங் கம் வகிக்கிறார். தற்போது லாலுவுக்கு 68 வயதாகிறது. 1990களில் மாட்டுத் தீவன வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் ஆட்சிக் கட்டிலிலும் அமர முடிய வில்லை. பீகார் மாநிலத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1997 வரை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் மாட்டுத்தீவனம் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாட்டுத் தீவன வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவும் சிறையில் உள்ளவருடன் தொலைபேசியில் பேசிய விவகாரமும் லாலு பிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலத்தை மங்கச்செய்துவிட்டது. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!