திருப்பூர்: விவசாயிகளுக்கான போராட்டத்தில் வெற்றி கிடைக்கா விடில் வீர மரணம் எய்தவும் தாம் தயாராகிவிட்டதாக விவசாயி அய்யாக்கண்ணு ஆவேசத்துடன் தெரிவித்தார். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கடன் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அய்யாக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அர சைக் கண்டித்து டெல்லியில் மீண்டும் போராட்டத் தில் ஈடுபட உள்ளதாக கூறினார். "விவசாயிகளின் கோரிக் கைகளை ம த்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் எதிர்வரும் 16, 17ஆம் தேதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள் ளோம். இம்முறை போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிட்டவில்லை யெனில் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளோம்," என்றார் அய்யாக்கண்ணு.
அய்யாக்கண்ணு படம்: ஊடகம்