பெங்களூரு: கர்நாடகாவில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜி.டி.தேவகௌடா உயர் கல்வித் துறை அமைச்சரானது குறித்து சர்ச்சை நிலவுகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, "நான் பிஎஸ்சி மட்டுமே படித்துள்ளேன். நான் முதல்வராக இருக்கவில் லையா? சிலருக்கு குறிப்பிட்ட துறைகளின் மீது ஆசை இருக்கலாம்.
ஆனால், ஒவ் வொரு துறையிலும் திறம்பட செயல்பட வாய்ப்புள்ளது. 8ஆம் வகுப்பு படித்தவர் உயர் கல்வி அமைச்சரானால் என்ன? அப்படியென்றால் அவருக்கு நிதித்துறை கொடுக்கவேண்டுமா? எதுவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கும் முடிவுதான்," என்று விளக்கமளித்தார். கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி.தேவகௌடா உயர் கல்வித்துறை அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார்.