புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் விமானங்கள் அடுத்தடுத்து எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படை தளபதி தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், பின்லேடனைப் பிடிப்பதற்காக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததைப்போன்று நுழைய தயார் என்றும் ஜெட்லி கூறினார்.
இந்நிலையில், இந்திய விமானப் படை எல்லையில் வெடி குண்டுகள் வீசி தாக்குவதற்கு முன் உளவுத் துறையால் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதி மவுலானா அமர் மற்றும் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சைஃப் ஆகியோரின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அருண்ஜெட்லி: எல்லையில் எப்போதும் எதுவும் நடக்கலாம்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!