புதுடெல்லி: இந்திய அரசியல் நிலவரம் குறித்து கூகள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவு பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. சுந்தர் பிச்சை புகைப்படத்துடன் அப்பதிவு வெளியாகியுள்ளது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பல லட்சம் இளையர்கள் வேலை இழப்பது தமக்குக் கவலை அளிக்கிறது என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டதாக அந்தப் பதிவு தெரிவிக்கிறது. மக்களின் உணவு விஷயத்தைக் கைவிட்டு, அவர்கள் நலன் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை பெயரில் வெளியான பதிவு என்பதால் சமூக வலைத்தளங்களில் இது வேகமாகப் பரவியது. இந்நிலையில் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள கருத்துகளை சுந்தர் பிச்சை கூறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தப் போலிப் பதிவு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே பலரால் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்திய அரசியல் குறித்து சுந்தர் பிச்சை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை
13 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2019 10:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!