இந்திய அரசியல் குறித்து சுந்தர் பிச்சை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

புதுடெல்லி: இந்திய அரசியல் நிலவரம் குறித்து கூகள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவு பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. சுந்தர் பிச்சை புகைப்படத்துடன் அப்பதிவு வெளியாகியுள்ளது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பல லட்சம் இளையர்கள் வேலை இழப்பது தமக்குக் கவலை அளிக்கிறது என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டதாக அந்தப் பதிவு தெரிவிக்கிறது. மக்களின் உணவு விஷயத்தைக் கைவிட்டு, அவர்கள் நலன் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை பெயரில் வெளியான பதிவு என்பதால் சமூக வலைத்தளங்களில் இது வேகமாகப் பரவியது. இந்நிலையில் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள கருத்துகளை சுந்தர் பிச்சை கூறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தப் போலிப் பதிவு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே பலரால் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!