புதுடெல்லி: பீகாரைச் சேர்ந்த ஜோதி என்ற 15 வயது சிறுமி, ஹரியானாவில் காயம் அடைந்த தனது தந்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரவு பகல் பாராமல் ஏழு நாட்கள் 1,200 கி.மீ சைக்கிள் மிதித்து தன் சொந்த ஊருக்குக் கொண்டுசென்றார். இதனால் அவர் உலகப் பாராட்டைப் பெற்று வருகிறார்.
“அந்தச் சிறுமியின் செயல், சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் அழகிய கால்களின் சாதனை,” என்று அமெரிக்க அதிபரின் புதல்வியான இவான்கா டிரம்ப் பாராட்டி இருக்கிறார்.