தாஜ்மகால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தற்காலிக மூடப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில போலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததும், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு இன்று காலை ஏராளமான போலிஸ்காரர்கள், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாஜ்மகாலுக்கு வருகை மேற்கொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதனையடுத்து தாஜ்மகால் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பல மணி நேரம் சோதனை மேற்கொண்டும் எவ்விதத் தடயமும் சிக்கவில்லை.
இதனை அடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் உ.பி. மாநிலத்தின் ஃபிரோசாபாத்தில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.