ஸ்ரீநகர்: காஷ்மீரில் வடக்கு சோபூர் பகுதியில் சனிக்கிழமை நடந்த அரசு நிகழ்ச்சியின்போது பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு போலிஸ் அதிகாரிகளுடன் பொதுமக்களில் இருவரும் பலியாகினர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.