இம்பால்: மணிப்பூர் மாநிலம், இம்பாலில் தொடர்ந்து 18 மணி நேரமாக நடத்திய சோதனையில், காருக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த 43 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.21 கோடி.
கொரோனா ெதாற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருந்து வரும் நிலையிலும் மியன்மார் எல்லையை ஒட்டியுள்ள மணிப்பூர் பகுதிகளில் தங்கம் கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ரூ.33 கோடி மதிப்புள்ள 67 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ரகசியத் தகவலின் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, காருக்குள் இருந்த இருவரிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து, 18 மணி நேரமாக காரில் நடத்திய சோதனையில் காரின் மூன்று பகுதிகளில் 43 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை கடத்துவதற்கு ஏதுவாக அந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.