காருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 43 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்

இம்­பால்: மணிப்­பூர் மாநி­லம், இம்­பா­லில் தொடர்ந்து 18 மணி நேர­மாக நடத்­திய சோத­னை­யில், காருக்­குள் மறைத்து வைக்­கப் பட்­டி­ருந்த 43 கிலோ­வுக்­கும் அதி­க­மான தங்­கக் கட்­டி­களை மத்­திய வரு­வாய் புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இவற்­றின் மதிப்பு ரூ.21 கோடி.

கொரோனா ெதாற்று கார­ண­மாக ஊர­டங்கு உத்­த­ரவு நடப்­பில் இருந்து வரும் நிலை­யி­லும் மியன்மார் எல்­லையை ஒட்டியுள்ள மணிப்­பூ­ர் பகு­தி­களில் தங்­கம் கடத்­துவது தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கடந்த மூன்று மாதத்­தில் மட்­டும் ரூ.33 கோடி மதிப்­புள்ள 67 கிலோ கடத்தல் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மணிப்­பூர் தலை­ந­கர் இம்­பா­லில், ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் கார் ஒன்றை மறித்து மத்­திய குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு அதிகாரி­கள் சோதனை நடத்­தியபோது, ­ காருக்­குள் இருந்த இரு­வரிடம் விசா­ரணை செய்தனர். தொடர்ந்து, 18 மணி நேரமாக காரில் நடத்­தி­ய சோதனையில் காரின் மூன்று பகு­தி­களில் 43 கிலோ தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. தங்­கத்தை கடத்­து­வ­தற்கு ஏது­வாக அந்த காரில் மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டது அதி­கா­ரி­க­ளின் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!