புதுடெல்லி: இந்தியாவில் மிகவும் ஆபத்தான புதிய வகை டெங்கிக் காய்ச்சல் பற்றி 11 மாநிலங்கள் தெரிவித்து இருக்கின்றன.
அந்த மாநிலங்கள் உடனடியாக முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து டெங்கிக் காய்ச்சலை துடைத்தொழிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
அதிவீரிய டெங்கி கொசு காரணமாக 'செரோடைப்-2' என்று குறிப்பிடப்படும் கடுமையான பாதிப்புள்ள காய்ச்சல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டால் உதவும் தொலைத்தொடர்பு வழிகளை ஏற்படுத்துமாறும் போதிய மருத்துவ சாதனங்களை இருப்பு வைக்கும்படியும் கொசு மருந்துகளும் சிகிச்சை மருந்துகளும் போதிய அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்துமாறும் மத்திய அரசு அந்த மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது.
கொரோனா தொற்று இன்னமும் பெரும் மிரட்டலாக நீடிக்கும் நிலையில், அடுத்த மிரட்டலாக டெங்கிக் காய்ச்சல் உருவெடுக்கிறது என்று இந்திய அரசு எச்சரித்து இருக்கிறது.
நாட்டில் கொவிட்-19 சூழ்நிலையைப் பரிசீலிப்பதற்காக உயர்நிலைக் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விழாக்காலம் நெருங்குவதால் மக்கள் அதிகமாக பல இடங்களிலும் கூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிய மத்திய அரசாங்கம், அத்தகைய நிலைமைகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலும் இந்த மாதத்திலும் அந்த மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சு ஏற்கெனவே ஆலோசனைகளைத் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய வகை டெங்கிக் காய்ச்சல் தலையெடுப்பதாக தெரியவந்துள்ளது.
கொவிட்-19ஐ பொறுத்தவரை, 15 மாநிலங்களில் தொற்று விகிதா சாரம் அதிகமாக இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் செம்மையான முறையில் அந்த மாநிலங்கள் எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷண் உத்தரவிட்டார்.
தலைதூக்கும் அடுத்த மிரட்டலைச் சமாளிக்க ஆயத்தமாகும்படி வலியுறுத்து