புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,446 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 197 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்றுப் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதையடுத்து அங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீபாவளிக்குப் பிறகு தொற்றின் மூன்றாவது அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்து உள்ளார்.