விசாரணையில் தாமதம்: உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புது­டெல்லி: லக்­கிம்­பூர் வன்­முறை தொடர்­பான வழக்கு விசா­ரணையை தாமதப்படுத்துவதாக உத்­த­ரப் பிர­தேச அர­சுக்கு உச்ச நீதி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

அம்­மா­நில போலி­சார் இது­வரை நான்கு பேரி­டம் மட்­டுமே விசா­ரணை நடத்தி இருப்­பதை நீதி­ப­தி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

லக்­கிம்­பூர் வன்­மு­றைச் சம்­ப­வத்­தில் நான்கு விவ­சா­யி­கள் உட்­பட ஒன்­பது பேர் கொல்­லப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து, மத்­திய அமைச்சர் அஜய் மிஸ்­‌ரா­வின் மகன் உள்ளிட்ட சிலர் மீது போலி­சார் வழக்­குப் பதிவு செய்­த­னர். உச்ச நீதி­மன்­றத்­தின் கண்­ட­னத்­துக்­குப் பிறகே அமைச்­ச­ரின் மகன் கைது செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக தொடுக்­கப்­பட்­டுள்ள பொது­நல வழக்கை உச்ச நீதி­மன்றம் விசா­ரித்­தது.

அப்­போது உத்­த­ரப் பிர­தேச காவல்­துறை விசா­ர­ணையை தாம­தப்­ப­டுத்­து­வ­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர். இத்­த­கைய தோற்­றத்தை உடைக்­கும் வகை­யில் விசா­ர­ணையை விரி­வு­ப­டுத்த வேண்­டும் என்­றும் வழக்கை எதிர்­கொண்­டுள்ள அனை­வ­ரி­ட­மும் விரை­வில் வாக்­கு­மூ­லம் பெற வேண்­டும் என்­றும் கூறினர்.

"44 சாட்­சி­யங்­கள் இருப்­ப­தா­கக் கூறி­விட்டு, இது­வரை நான்கு பேரி­டம் மட்­டுமே வாக்­கு­மூ­லம் வாங்­கி­யுள்­ளீ்­ர்­கள்," என்று நீதி­பதி­கள் சுட்டிக் காட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!