திருமலை: திருப்பதியில் மழை நீரில் கார் மூழ்கியதால் அதில் சிக்கியிருந்த புது மணப்ெபண் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் ரெய்ச்சூரிலிருந்து மணப்பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காரில் திருப்பதி கோயிலுக்குச் சென்றனர்.
திருப்பதியில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.
வெஸ்ட் சர்ச் அருகே சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கியதாக போலிசார் தெரிவித்தனர். ஓட்டுநர் ஆழம் தெரியாமல் காரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாகனம் வெள்ளத்தில் பாதியளவுக்கு மூழ்கியது. எஸ்வி பல்கலைக் கழக போலிசார், ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை உயிரோடு மீட்டனர்.
ஆனால் புது மணப்பெண் சந்தியா அதே இடத்தில் உயிரிழந்தார்.
போலிசார் வழக்குப் பதிவு செய்து இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.