புதுடெல்லி: இந்தியாவில் ஐந்து நாள்களாக மூவாயிரத்துக்கும் மேல் பதிவான அன்றாட கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை மீண்டும் மூவாயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.
நாட்டின் மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை புதிதாக 2,568 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியானதாகத் தெரிவித்தது. இதற்கு முன்னர் ஏப்ரல் 27ஆம் தேதி இந்த எண்ணிக்கை 2,927ஆக இருந்தது.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் குறைவான எண்ணிக்கையில் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினசரி பாதிப்பு குறைய இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இவ்வேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுடெல்லி மருத்துவமனைகள் படுக்கை எண்ணிக்கையை அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டது.