குவாட் உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

குவாட் உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

1 mins read
b60881b5-5771-403c-a793-d546604d6447
-

புதுடெல்லி: குவாட் உச்ச மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக பிர­த­மர் மோடி ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கியோ செல்­கி­றார். அங்கு இரு தினங்­களில் 23 நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க உள்­ளார்.

குவாட் அமைப்பை இந்­தியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஜப்பான் ஆகிய நாடு­கள் இணைந்து உரு­வாக்கி உள்­ளன.

நாளை இந்த அமைப்­பின் உச்ச மாநாடு தோக்­கி­யோ­வில் நடை­பெற உள்­ளது. உறுப்பு நாடு­க­ளின் தலை­வர்­கள் இதில் பங்­கேற்­கின்­ற­னர்.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், பிர­த­மர் மோடி, ஜப்­பான் பிர­த­மர் கிஷிடா, ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் மோரிசன் ஆகி­யோர் கலந்­து­கொள்வது உறுதி­யாகி உள்­ளது.

இந்­தப் பய­ணத்­தின்­போது பிர­த­மர் மோடி நாற்­பது மணி நேரம் ஜப்­பா­னில் தங்கி இருப்­பார் என்­றும் அதற்­குள் 23 நிகழ்ச்­சி­களில் பங்­கேற்கத் திட்­ட­மிட்­டுள்­ளார் என்­றும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், உறுப்பு நாடு­க­ளின் தலை­வர்­க­ளை­யும் அவர் தனித்­தனியே சந்­திக்க வாய்ப்புள்­ள­தா­கத் தெரி­கிறது. இம்­முறை குவாட் உச்ச மாநாட்­டில் உக்­ரேன் விவ­கா­ரம் குறித்து ஆலோ­சிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.