புதுடெல்லி: விலைவாசி அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அரசாங்கம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அதிபர் மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமை யில் பேரணியாக காங்கிரசார் சென்றார். ஆனால் அதற்கு அனு மதியளிக்காத காவல்துறை, ராகுல் காந்தி உட்பட பலரைக் கைது செய்தது. அதேபோல பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப் பட்டனர்.