உத்தரகாண்ட் கொலை: இளம்பெண்ணின் இறுதிச் சடங்குக்கு குடும்பத்தினர் ஒப்புதல்

ஹரித்­து­வார்: உத்­த­ர­காண்ட் மாநில ஓய்வு விடு­தி­யில் வர­வேற்­பா­ள­ராக வேலை­பார்த்த அங்­கிதா பண்­டாரி எனும் 19 வய­துப் பெண் கொலை­செய்­யப்­பட்­டதை அடுத்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

பார­திய ஜனதா கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான வினோத் ஆர்­யா­வின் மகன் புல்­கிட் ஆரி­யா­வின் ஓய்வு விடு­தி­யில் அங்­கிதா வேலை பார்த்­தார்.

அவ­ரது சட­லம் கால்­வாய் ஒன்­றில் கண்­டெ­டுக்­கப்­பட்­டதை அடுத்து மாநில முதல்­வர் புஷ்­கர் சிங் தாமி சிறப்பு விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டார்.

பிரே­தப் பரி­சோ­த­னை­யில் அங்­கிதா நீரில் மூழ்கி இறந்­த­தா­க­வும் அவ­ரது உட­லில் காயங்­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து அங்­கி­தா­வின் குடும்­பத்­தி­னர் அவ­ரது உடலை தக­னம் செய்ய மறுத்து நீதி­கேட்டு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

குடும்­பச் சூழ­லால் கல்­வி­யைத் தொடர முடி­யா­மல் வேலை­க்குச் சேர்ந்த அங்­கிதா தனது முதல் மாதச் சம்­ப­ளத்­தைக்­கூட வாங்­க­வில்லை என்று உற­வி­னர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

ஸ்ரீந­கர்-கேதார்­நாத் நெடுஞ்­சாலை­யில் அவர்­கள் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

பின்­னர் நேற்று மாலை, குடும்­பத்­தி­னர் அங்­கி­தா­வின் இறு­திச் சடங்­கு­களை நடத்த ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் ஆனால் கூட்­டம் சேரா­மல் கட்­டுப்­ப­டுத்­தும்­படி அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் என்­டி­டிவி செய்தி நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!