பீகாரில் பாஜக எம்.பி. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

பீகார்: பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பாஜக, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த அஜய் குமார் நிஷாத், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பீகாரில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதும், ஒருவரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதும்தான் முக்கிய வேலை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட இறுதி ஆசை என்ன என்பதை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முன் அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இது பண அதிகார தேர்தலாக இருக்காது. மக்கள் வலிமையின் தேர்தலாக இருக்கும்,” என்றார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பீகாரில் 40 தொகுதிகளில் 39ல் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!