சன்டெக் சிட்டியில் நடைபெற விருக்கும் சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரபல இந்தி நடிகர் கோவிந்தா. சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் இன்று முதல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 'சிங்கப் பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி' நடைபெறவுள்ளது. நடிகர் கோவிந்தா 24ஆம் தேதி சனிக் கிழமை கண்காட்சியில் கலந்துகொள்கிறார். இந்தி நடிகரான கோவிந்தா, 1986ஆம் ஆண்டு வெளியான 'இஸாம்' இந்தித் திரைப்படம் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்தவர். நகைச்சுவை, நடனம் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சியின் 3வது நாளான நாளை மறுநாள் சனிக் கிழமை நடிகர் கோவிந்தா கலந்துகொள்கிறார். சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சியில் கைவினைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள், அழகழகான அணிகலன்கள், மண்பாண்டங்கள், பொம்மைகள், நறுமணப் பொருட்கள், ஆயுர்வேத மற்றும் ஆரோக்கியப் பொருட்கள், காபி, தேநீர் உட்பட இன்னும் பலவற்றை விற்கும் இந்தியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 158 கடைகள் இடம்பெற்றிருக்கும். தமிழ் முரசு, தப்லா, டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.