வேகமான இன்றைய சூழ்நிலையில் பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். இவர்களின் நினைவுத்திறனை மேம்படுத்த அறிவியல் பதில் சொல்கிறது.
லேசான நமது உடல் செயல்பாடுகூட நினைவகச் செயல்பாட்டை உடனடியாக மேம்படுத்துகிறது. உடற்பயிற்சியின்போது ஒவ்வொரு நொடியும் உடலில் அசைவு ஏற்படுகிறது. இதனால் நினைவுத்திறன் அதிகரிக்கிறதாம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் இர்வின் என்பவரின் ஆய்வுக் குழு இதனைக் கண்டறிந்துள்ளது.
மிக இலகுவான உடற்பயிற்சிகளும்கூட நினைவக உருவாக்கம் மற்றும் சேமிப்பிற்குக் காரணமான மூளையின் பாகங்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"ஒரு சிறிய யோகாசனப் பயிற்சியைத் தங்களின் ஒவ்வொரு நாள் செயல்பாட்டிலும் சேர்த்துக் கொள்பவர்கள் தங்களது நினைவுத்திறன் சாவியை கையில் வைத்திருக்கிறார்கள்; எனவே, அவர்கள் நினைவில் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பேராசிரியர் இர்வினுடன் ஜப்பானிலுள்ள சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் மிக இலகுவான உடற்பயிற்சிகள்கூட நினைவக உருவாக்கம் மற்றும் சேமிப்பிற்குக் காரணமான மூளையின் பகுதிகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். 36 ஆரோக்கியமான இளைஞர்களிடம் உடல் செயல்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 நிமிட மிதமான உழைப்பு மற்றும் உடல் செயல்பாடு, கணிசமான அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தனர்.
உயர் தெளிவுத்திறன் கொண்ட செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங்கை பயன்படுத்தி, உடற்பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகு மூளையை குழு ஆய்வு செய்தது. மேலும், அப்போது அங்கே விரி வான நினைவகச் செயலாக்கத்துடன் இணைக்கப்பட்ட 'ஹிப்போகாம்பல் டென்டேட் கைரஸ்' மற்றும் உறுப்புகளின் புறப்பகுதி
களுக்கு இடையே சிறந்த இணைப்பு இருப்பதையும் கண்டறிந்தனர். ஆய்வு முடிவுகள் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.