ஹர்ஷிதா பாலாஜி
இந்திய இளையர்களின் சாதனை களைக் கொண்டாட அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு 'வானமே எல்லை' என்ற நிகழ்வை நேற்று முன்தினம் மெய் நிகரில் நடத்தியது. அறிவார்ந்த தேசக் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற 21 வயது பில் கிரண்குமார், அரசாங்க சேவை ஆணைய உப காரச் சம்பளம் பெற்ற 21 வயது சுந்தரம் மோகன் ஷக்தி ஆகிய இருவரது கல்விப் பயணத்தைப் பற்றியும் அவர்களின் சாதனை களைப் பற்றியும் பங்கேற்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் தெரிந்து கொண் டனர். சிங்கப்பூர் காவல்துறையின் உபகாரச் சம்பளத்தை பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை ஷக்தியைச் சேரும். கல்வியை தவிர, சமூக சேவையிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவ 'கோ வித் தி ஃபிலோ' என்ற அமைப்பை தன் நண்பர்களோடு ஷக்தி ஆரம்பித்தார். அறிவார்ந்த தேச உபகாரச் சம்பளத்தைப் பெற்ற பில்லுக்கு தேசிய சேவையில் சிறந்து விளங்கியதால் தளபத்திய அதிகாரிக்கான நாணய விருதும் கிடைத்தது. சமூக அக்கறை கொண்ட இவர், தொடக்கக்கல்லூரியில் நண்பர்களோடு 'மீல்ஸ் ஒன் வீல்ஸ்' என்ற அமைப்பு வழியாக முதியோருக்கு உதவி வந்தார். இருவரும் அழகுத் தமிழில் சிறப்பாகப் பேசியதைப் பாராட்டினார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா. "இவர்களைப் போல எல்லா இளையர்களும் தமிழ் பேசினால், தமிழை வளர்க்க விழா தேவை இல்லை," என்றார். 2018ல் தொடங்கப்பட்ட அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு, ஒவ்வொரு தமிழ்மொழி விழாவிலும் வித்தியாசமான நிகழ்ச்சியை படைத்து வருகிறது.