மின்னூல்களை வாசிக்க உதவும் கிண்டில் உள்ளிட்ட மின்திரைகள் பொதுவாக கருப்பு வெள்ளையில் இருக்கும். வண்ணப் புத்தகங்களை படிக்க வேண்டுமானால் வண்ணத்தில் இருக்காது. 'பாக்கெட்புக்', 'இ-இங்க்' போன்ற இதர வாசிப்பு திரைகளும் கறுப்பு வெள்ளை யிலேயே இருக்கின்றன.
இந்த நிலையில் 'கலைடோ பிளஸ்' என்ற வண்ணத் திரை கொண்ட இ-ரீடரை, 'இ-இங்க்' நிறு வனம் அண்மையில் அறிமுகப் படுத்தியது. இது, ஏற்கெனவே இ-இங்க் உருவாக்கிய 'கலைடோ-3' என்ற திரையைவிட 30 விழுக்காடு அதிக அடர்த்தியான வண்ணங் களைக் கொண்டது.
மேலும் கண்ணுக்குக் கெடுதல் விளைவிக்கும் நீல ஒளியை 'கலைடோ பிளஸ்' அறுபது விழுக்காடு வரை குறைக்கும் என்று ெதரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறிய திரை முதல் 13.3 சதுர அங்குலம் வரையிலான வெவ்வேறு அளவுகளில் 'கலைடோ பிளஸ்' வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் இல்லாமல் இரவில் படித்தாலும் கண்களுக்கு இதமாக இருக்கும்படி இதிலுள்ள தொழில்நுட்பம் உதவுகிறது. இம்மாதம் 27ஆம் தேதி அன்று தைவானில் நடக்கும் தைப்பே நங்காங் (Taipei Nangang) கண்காட்சியில் புதிய கலைடோ-பிளஸ் வாசிப்புத் திரை அறிமுகப்படுத்தப்படலாம்.