இரு மொழிப் பயன்பாட்டைச் சிறார்களிடத்தில் வளர்க்க எழுத்தாளர் அபி கிருஷ் உட்பட நான்கு எழுத்தாளர்கள் 'டாக்கிங் யுவர் வே அவுட்' என்ற நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ஏற்பாட்டில் மே 26ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற்ற 'ஏஎஃப்சிசி' எனப்படும் சிறுவர் நூல்களுக்கான ஆசிய விழாவின் ஓர் அங்கமாக மே 28ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆங்கில எழுத்தாளர் ஈவ்லின் சூ வாங் எழுதிய 'ஜஸ்ட் அ லிட்டில் மைனா' என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த விளையாட்டில் கொடுக்கப்பட்டிருந்த குறிப்புகளை வைத்து சீன, மலாய், தமிழ் ஆகிய மொழிகளைப் பற்றி சிறார்கள் தெரிந்துகொண்டனர்.
சீன எழுத்தாளர் குவெக் ஹாங் ஷ்யின், மலாய் எழுத்தாளர் ரில்லா மெலாட்டி, தமிழ் எழுத்தாளர் அபி கிருஷ் ஆகியோர் எழுதிய கதைகளை அவரவர் மொழிபெயர்த்து அனைத்து சிறுவர்களுக்கும் ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
பிறகு, 'குவே பஹுலு', 'சாம்பார்' போன்ற எளிய வார்த்தைகளை எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
"என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கின்றன. மாணவர்களிடத்தில் எவ்வாறு இருமொழி கற்றலை மேம்படுத்தலாம், எவ்வாறு ஈடுபாடு மிகுந்த வழியில் பாடங்களைக் கற்றுக்கொடுக்கலாம் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சியின் வழியாக நான் கற்றுக்கொண்டேன்," என்றார் ஜின் சான் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஸ்ரீவித்யா மோகன், 32.
செய்தி: ஹர்ஷிதா பாலாஜி