இன்று பெரும்பாலான மக்கள் அசைவ உணவில் கோழியைத்தான் அதிகம் விரும்பி உண்கின்றனர். அதிலும் சிறு குழந்தைகள் சொல்லவே வேண்டாம்.
குழந்தைகள் விரும்பி உண்ணும் கோழி வகைகளில் ஒன்றுதான் 'சிக்கன் லாலிபாப்'.
இதனை சுவையான முறையில் கடைகளில் செய்யும் விதத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சிக்கன் லாலிபாப்
துண்டுகள் - 8, முட்டை - 1, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி,
தயிர் - 50 மில்லி, சோள மாவு - ஒரு தேக்கரண்டி, விரும்பினால் ஒரு சிட்டிகை சிவப்பு வண்ணம் சேர்த்துக் கொள்ளவும்
முதலில் சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் பாத்திரம் ஒன்றில் முட்டை, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மாவு, உப்பு, சாப்பாட்டு கலர் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலி பாப் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 'சிக்கன் லாலிபாப்' துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான 'சிக்கன் லாலிபாப்' தயார்.