வீட்டுக்கலன்களை விற்கும் இக்கியா நிறுவனம் தீபா வளியை முன்னிட்டு வீட்டை அலங்கரிக்கும் பொருள்களை அறிமுகம் செய்திருக்கிறது. அரோமாட்டிஸ்க் என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
நவீன உள்புற வடிவமைப்புள்ள இல்லங்களில் தீபாவளியின் வண்ணங்களைச் சேர்ப்பது பொருள்களின் நோக்கம். இந்தியாவில் காணப்படும் பாரம்பரியக் கலைகளின் நுணுக்கங்களும் சோடனைகளையும் உள்ளடக்கி இருப்பதாக அப்பொருள்களின் வடிவமைப்பாளர் லூனா கில் கூறினார்.
செந்தாமரை வடிவத்தில் மெழுகுவத்தி விளக்குகள், தின்பண்டங்களை வைக்க தங்க மாதுளை வடிவிலான கலன்கள் போன்றவை பொருள்களில் அடங்கும். தீபாவளிச் சிறப்பாக காய்ந்த நறுமன மலர்களும் திரைச்சீலைகளும்கூட உள்ளன.
மேலும், வரும் 5ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, புதன்கிழமை இரவுகளில் தீபா வளியை முன்னிட்டு சிறப்பு இரவு உணவுவகைகளையும் இக்கியாவில் உண்ணலாம்.
கோழி பிரியாணி, மசைத்த உருளைக்கிழங்குடன் ஆட்டிறைச்சிக் கால் மசாலா, தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆட்டிறைச்சி 'ரெண்டாங்' பிரியாணி உள்ளிட்ட உணவுவகைகள் வழங்கப்படுகின்றன.