பெண்களின் அலங்காரப் பொருள்களில் முக்கியமான ஒன்று நகைகள். இதனை வைரம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, நவரத்தினக் கற்களில் பெண்கள் அணிவர்.
ஆடைகளுக்கு ஏற்ற பொருத்தமான நகைகளை அணியும் போதுதான் அலங்காரம் முழுமை பெறும். அந்த வகையில் முத்து நகைகளும் பெண்களின் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நவீன காலத்திற்கு ஏற்றார்போல் காதணி, மோதிரம், ஆரம், ஒட்டியானம், நெற்றிச்சுட்டி உள்ளிட்ட அனைத்து நகைகளும் முத்தில் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கின்றன.
இவை அழகை மட்டுமன்றி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் முத்து
[ο]முத்து நகைகள் ஒருவரது எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரித்து மனதை அமைதியாக்கும் என நம்பப்படுகிறது.
[ο] நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்பது முத்து நகைக்கும் பொருந்தும்.
[ο] முத்து நகைகள் அணிவதன் மூலம் நினைவாற்றலும் தைரியமும் அதிகரிக்கும் என்றும் எளிதில் கோபப்படுபவர்கள் முத்து நகைகளை அணிவதன் மூலம் கோபத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்றும் சோதிட ரீதியாகக் கூறப்படுகிறது.
[ο]சேலை அணியும் போது முத்து நகைகள் அணிவதன் மூலம் உங்கள் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக் காட்ட முடியும். மற்ற உடைகளுக்கும் முத்து நகைகள் பொருத்தமாக இருக்கும்.
வெண்மை நிறத்தில் மட்டுமன்றி க்ரீம், கறுப்பு, தங்கம், சாம்பல், பிங்க், நிலம் போன்ற நிறங்களிலும் முத்துகள் விளைகின்றன.
[ο] முத்து நகைகளை அணிவதால் மனஅழுத்தம் குறையும்.
[ο] முத்துகளில் காணப்படும் இரும்பு, துத்தநாகம், செலினியம், கால்சியம் போன்ற தாதுக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இவை முகப்பருக்கள். கரும்புள்ளிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.
[ο] முத்து நகைகளில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள், தாதுக்கள் பதற்றத்தைக் குறைக்கக்கூடியவை. முத்துகளின் நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் உண்மையான முத்துகள் பதிக்கப்பட்ட அணிகலன்களைக் கண்டறிந்து வாங்குவது பயன் தரும்.