பிறப்பில் எத்தவறும் செய்யாத
குழந்தை தெய்வமாகத்தானே பிறக்கிறது
ஆனால் வாழும்போதோ
அதர்மங்கள் இழைத்து
தீமைகள் விதைத்து
தெய்வத்திலிருந்து அரக்கனாவது ஏன்?
குழந்தை வளர வளர
அவனுள்ளே அளவில்லாத
தீய எண்ணங்கள் சுரக்கச் சுரக்க
இதற்குக் காரணம் எவை!
சுயநலம்,பொறாமை,
கோபம், அகம்பாவம்,
தீராத அளவில்லாத ஆசைகள், மோகங்கள்
தீராத ஆசையினால் வருபவை
இன்று நம்முடையதுதான்
ஆனால்
நாளை அது யாருடையதோ
இதுவே உலக நியதி
இதை அறியா மனிதன்
மற்றவற்றின் மேல் மோகங்கொண்டு
மற்றவரின் மேல் ஆசைக்கொண்டு
தன்னை இழந்து வாழ்க்கையையும்
இழப்பது வேத சத்தியமாகும்
- பா.ஹரிஹரன்
யூனோய தொடக்கக்கல்லூரி (17A5)